×

கிராமங்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உடனுக்குடன் செய்து தரப்படும்: திமுக வேட்பாளர் செல்வம் உறுதி

திருப்போரூர்: கிராமங்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வெற்றி பெற்று வந்தால் உடனுக்கு உடன் செய்து தரப்படும் என காஞ்சிபுரம் திமுக எம்பி வேட்பாளர் க.செல்வம் வாக்கு ேசகரிப்பின்போது மக்களுக்கு உறுதியளித்தார். அப்போது, கிராமங்களில் வேட்பாளருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்று அளித்தனர். தமிழ்நாட்டில் வரும் 19ம்தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளராக க.செல்வம் போட்டியிடுகிறார். நேற்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வேட்பாளர் செல்வம் திருப்போரூர் ஒன்றியத்தில் தனது பிரசாரத்தை மேற்கொண்டார். முதற்கட்டமாக, திருப்போரூர் வடக்கு ஒன்றியத்திலடங்கிய கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சியில் அவருக்கு ஊராட்சி தலைவர் வள்ளி எட்டியப்பன், கிளை செயலாளர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, வீதி வீதியாக திறந்தவேனில் சென்ற அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் வேட்பாளர் க.செல்வம் ஆகியோர் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது, திமுக ஆட்சியின் 3 ஆண்டுகால சாதனைகளையும், 10 ஆண்டுகால மோடி ஆட்சியின் வேதனைகளையும் பட்டியலிட்டார். மேலும், கிராமங்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என உறுதி அளித்தனர். பின்னர், முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா மயில்வாகனன், கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் சுந்தர் ஆகியோர் தலைமையில் மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, கேளம்பாக்கம் வந்த வேட்பாளருக்கு ஊராட்சி தலைவர் ராணி எல்லப்பன் தலைமையில், திமுகவினர் பொக்லைன் இயந்திரத்தில் மலர்களை கொட்டி சிறப்பான வரவேற்பு அளித்தனர். படூர் ஊராட்சியில் தலைவர் தாரா சுதாகர் தலைமையில் கிரேன் இயந்திரத்தில் பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதிய உணவிற்கு பிறகு திருப்போரூர் தெற்கு ஒன்றியத்திலடங்கிய திருவிடந்தை, வடநெம்மேலி, நெம்மேலி, தண்டலம், ஆலத்தூர், பையனூர் உள்பட பல்வேறு ஊராட்சிகளில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு ஊராட்சிகளிலும் திமுக கூட்டணி கட்சியினரும், பொதுமக்களும் திரண்டு வந்து திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த பிரசாரத்தின்போது, திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி, மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன், துணை தலைவர் சத்யாசேகர், தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பையனூர் சேகர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் விஜயகுமார், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள் கௌரிசங்கர், செல்வம் மற்றும் பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

The post கிராமங்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உடனுக்குடன் செய்து தரப்படும்: திமுக வேட்பாளர் செல்வம் உறுதி appeared first on Dinakaran.

Tags : DMK ,Selvam ,Kanchipuram ,K. Selvam ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் சுற்று வட்டார பகுதிகளில்...